ராமநாதபுரத்தில் 100 கிலோ கடல் அட்டை பறிமுதல் - 3 பேர் கைது
Sep 24 2020 8:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டிணத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை பதுக்கி வைத்திருந்த முகம்மது மைதீன், முகமது யாசர், அமீர் அம்சா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த கடல் அட்டைகளை, இலங்கை வழியாக சிங்கப்பூர், மலேசியா, தாங்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது, விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.