கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் எச்சரிக்கை
Sep 24 2020 8:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, காட்டு யானைகள் சுற்றித் திரிவதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, கிராம மக்களுக்கு, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கர்நாடக வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. அங்கிருந்து 3 யானைகள் வெளியேறி, கேரட்டி, பச்சப்பனட்டி, கௌதாளம் ஆகிய கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த நிலையில், பொதுமக்கள் சிலர், யானைகளின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து நேரில் சென்ற வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்