சென்னையை அடுத்த செங்குன்றத்தில் முதியவரை தாக்கி பணம் பறித்த நபர் கைது
Sep 25 2020 1:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் முதியவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தின், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் காயம் அடைந்து சுயநினைவின்றி குடிபோதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஒருவர் கல்லால் முதியவரை தாக்கி விட்டு பணத்தை எடுத்து சென்று விட்டதாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சாதிக்பாஷாவை என்பவரை போலீசார் கைது செய்தனர்.