திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை - கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
Sep 25 2020 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவொற்றியூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, ஹன்ஸ், குட்கா, உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த ராஜன் என்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 300 பாக்கெட்கள் இதன் மதிப்பு பத்தாயிரம் ரூபாய் இருக்க கூடும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ராஜன் மீது வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர்.