சென்னை தண்டையார்பேட்டையில் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பல் கைது
Sep 26 2020 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தண்டையார்பேட்டையில், மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டையில் வசிக்கும் 65 வயது மூதாட்டி பொன்னம்மாள், தனது வீட்டின் வாயிலில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, வீட்டினுள் பதுங்கி இருந்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த நான்கரை சவரன் நகையை பறித்துச் சென்றனர். சிசிடிவி பதிவை ஆய்வு செய்ததில், சோலையப்பன் தெருவைச் சேர்ந்த பரத் மற்றும் ராகுல் ஆகியோர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ், கார்த்திக், தனுஷ், சஞ்சய், விஜய், டியோ மணி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து, 13 செல்போன்கள், நகை, கத்தி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.