தானியங்கி விசைத்தறியாக மாற்றும் மானியம் மீது நடவடிக்கை இல்லை - இந்திய ஜவுளித்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
Oct 24 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாதாரண விசைத்தறியை, தானியங்கி விசைத்தறியாக தரம் உயர்த்துவதற்கு வழங்கப்படும் மானியத்திற்கு விண்ணப்பித்தும் 3 ஆண்டுகளாக வழங்கப்படாததை எதிர்த்து தொடர்பட்ட வழக்கில், மத்திய ஜவுளிதுறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசைத்தறியை தானியங்கி விசைத்தறியாக மாற்ற மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து நெசவாளர்களின் விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மீது கடந்த 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த மனு மீது ஜனவரி 4ம் தேதிக்குள் பதிலளிக்க, இந்திய ஜவுளித்துறை ஆணையர், கோவை மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திக்கு தள்ளி வைத்தனர்.