கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, லேப்டாப் கொள்ளை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Oct 28 2020 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில், வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சுந்தராபுரம் வேளாங்கண்ணி நகரில் வசித்து வரும் நிகாஸ் என்பவர், தனது மனைவியின் பிரசவத்திற்காக, சொந்த ஊரான காங்கேயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டின் முன்கதவு திறந்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து, நேரில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 43 சவரன் நகை மற்றும் லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.