மதுரையில், காரில் கன்றுக் குட்டியை திருடிச்சென்ற திருடர்களை போலீசார் துரத்திப்பிடித்து கைது
Oct 28 2020 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில், காரில் கன்றுக் குட்டியை திருடிச்சென்ற திருடர்களை, போலீசார் துரத்திப்பிடித்து கைது செய்தனர். சசி நகரில் வசிக்கும் அசோக்குமார் என்பவர், தனக்குச் சொந்தமான 4 கன்றுக் குட்டிகளை, வீட்டின் அருகே கட்டி வைத்துவிட்டு, பணிக்குச் சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது 3 கன்றுகள் மட்டுமே இருந்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மதுரை கரிமேடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற சொகுசு காரை விரட்டிச்சென்று போலீசார் சோதனை செய்தபோது, பசுக் கன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரில் இருந்த மணிமாறன், சூரியகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், இருவரும் பசுக் கன்றை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.