சிதம்பரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
Oct 28 2020 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில், ஜெயக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரது செல்போனை சோதனை செய்ததில், பல சிறுமிகளுடன், படுக்கை அறை மற்றும் வெளிஇடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த இளைஞரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.