கர்நாடகாவில் சிறைபிடிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களை விடுவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Oct 28 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகா ஆழ் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேரை, கர்நாடகாவை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பிணைக் கைதிகளாக்கிய சம்பவம் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.