குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய வி.சி.க.வினர் மீது போலீஸ் தடியடி - செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனைக் கண்டித்து போராட்டம்
Oct 28 2020 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஷ்பு தங்கியிருந்த சொகுசு விடுதியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது, போலீசார் கடுமையாக தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், அக்கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 10-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் பொய்வழக்கு வழக்குப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.