சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Dec 1 2020 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை பகுதியில், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகையில் கடந்த சில ஆண்டுகளாக நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வைகை ஆற்றில் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்புவனம் மற்றும் மானாமதுரையை சுற்றியுள்ள விவசாயிகள், தங்களது விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.