இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன் தலைமறைவு
Dec 1 2020 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர். வி.வி.ஆர்.நகரில் வசித்து வந்த ராமர் என்பவருக்கும், அவரது மகன் சக்திகுமாருக்கும் இடையே, குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், உருட்டுக்கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதில், ராமர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பயந்துபோன சக்திகுமார், தலைமறைவாகி விட்டார்.