தேனி மாவட்டம் போடி அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது - 1 கிலோ கஞ்சா பறிமுதல்
Dec 1 2020 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடி அருகே, கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார். மூணாண்டிபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேரில் சோதனை மேற்கொண்ட தனிப்படை போலீசார், கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பிச்சை என்ற முதியவரை கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.