தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு
Dec 2 2020 8:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் மேலும் ஆயிரத்து 428 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 11 பேர் இன்று உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில், இன்று, ஆயிரத்து 428 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 11 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733-ஆக அதிகரித்துவிட்டது.
சென்னையில் இன்று ஒரேநாளில் 397 பேர், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 119 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.