டிசம்பர் 11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு
Dec 2 2020 8:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். அக்குழுவின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம் என்றும், இது மாண்புமிகு அம்மாவின் கொள்கைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.