வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Dec 2 2020 8:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில், காங்கிரஸ் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளுடன் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ஏர் கலப்பையுடன் பேரணி செல்வதற்கு, காவல்துறையினர் திடீரென அனுமதி வழங்க மறுத்ததால், தாலுகா அலுவலகம் முன்பு, மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.