திண்டுக்கல்லில் சேலையில் கட்டிய தொட்டிலில் தூரி விளையாடிய சிறுவன் பலி - கழுத்தில் கயிறு இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு
Dec 2 2020 8:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேலையில் கட்டிய தொட்டிலில் தூரி விளையாடிய சிறுவன், கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தான். நத்தம் அருகே நடுவனூரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் 10 வயது மகன் ராமன், வீட்டில் கட்டியிருந்த தொட்டில் சேலையில் தூரி ஆடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்து விடவே, சேலை கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியது. இதையடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.