சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள் : பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி
Dec 3 2020 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகளும் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி திரு. ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த 10 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நீதிபதிகள் திரு.சத்தி குமார், திருமதி.எஸ்.ஆனந்தி, திரு.ஏ.ஏ.நக்கீரன், திருமதி.ஆர்.என்.மஞ்சுளா, திரு.கே.முரளி சங்கர், திரு.ஜி.இளங்கோவன், திருமதி.எஸ்.டி.தமிழ் செல்வி, திரு.ஜி.சந்திரசேகரன், திரு.வி.சிவஞானம், திருமதி.எஸ்.கண்ணம்மாள் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி திரு.ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சி யூடியூப் மூலம் நேரலை செய்யப்பட்டது.