புரெவி புயல் மன்னார் வளைகுடாவில் மையம் - இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல்
Dec 3 2020 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் காரணமாக தென் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் தொடங்கி 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானியை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புரெவி புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.