தமிழகத்தில் ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்
Dec 3 2020 6:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து இன்று மட்டும் ஆயிரத்து 413 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளதாகவும், தலைநகர் சென்னையில், 382 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளதாகவும், மாநிலத்தில் தற்போது 10 ஆயிரத்து 988 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.