அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளையர்கள் கரங்களில் பிடிபடாத டிடிவி தினகரனின் காளை - வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வாகை சூடியது
Jan 16 2021 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது.
பொங்கல் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் காளை, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தபோது அதை வீரர்கள் அடக்கம் முற்பட்டனர். ஆனால் அவர்களின் கரங்களில், அந்தக் காளை பிடிபடாமல் வாகை சூடியது. அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும், திரு. டிடிவி தினகரனின் காளை வெற்றிவாகை சூடியது நினைவுகூரத்தக்கது.