தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jan 17 2021 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.