திருவண்ணாமலையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொல்ல முயன்ற இளைஞர் - மனமுடைந்த பெண் தற்கொலை முயற்சி
Jan 19 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காதலிக்க மறுத்த பெண்ணை வீடு புகுந்து கொல்ல முயன்ற நபரின் செயல் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேந்த சந்தியா சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பக்கத்து கிராமமான தெள்ளூரைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் சந்தியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். எனினும் அவரது காதலை சந்தியா ஏற்கவில்லை. சந்தியாவின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற கோதண்டராமன், கத்தால் கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் கோதண்டராமனை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த சந்தியா பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது சந்தியா, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கோதண்டராமனை தேடி வருகின்றனர்.