அம்மா கிளினிக்கிற்கான மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகமாகவே நியமனம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல்

Jan 20 2021 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா கிளினிக்கிற்கான மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்படுவதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அம்மா கிளினிக்குகளுக்கான மருத்துவப் பணியாளர்கள் தனியார் ஏஜென்சி மூலம், தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மினி கிளினிக்கிற்கான செவிலியர்கள் நியமனம் தொடர்பாக, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மினி கிளினிக் என்பது கொரோனா தொற்று காலத்திற்காக, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு எனவும், இந்த நியமனங்கள் அவசர நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாகவே நடைபெற்று வருவதாகவும், பதில்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவையும் மீறி, பணி நியமனம் நடைபெற்று வருவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மனு தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00