கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்
Jan 20 2021 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.கோமுகி மணியன் முன்னிலையில், மாற்றுத்திறனாளிகள் கழகத்தில் இணைந்தனர். வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே தனி அணி உருவாக்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தேர்தல் பணியாற்ற இருப்பதாக, மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.