ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியில் முறைகேடு வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Jan 20 2021 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், செய்துவரும் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணைக்கு உட்படுத்த கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4 மாசி வீதிகளில் நடைபெறும் பணிகளில் முறைகேடுகள் நடப்பதால், அப்பணிகளை தர ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.