சென்னை வானகரம் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் : கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

Jan 25 2021 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

வானகரம் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், வானகரத்தில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை கார் மற்றும் ஆட்டோவில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சுங்கச்சாவடியில் இருந்த கட்டணம் வசூலிக்கும் பூத்களை சரமாரியாக அடித்து உடைத்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். இதில் நான்கு கண்ணாடி பூத்கள் முற்றிலும் உடைந்து சேதமானது. இதையடுத்து சுங்கச்சாவடியை அடித்து உடைத்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00