கூட்டணியில் சேருமாறு காங்கிரஸ் விடுத்த அழைப்பை நிராகரித்தார் கமல்ஹாசன் - கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை என்றும் அறிவிப்பு
Jan 25 2021 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸின் கூட்டணி அழைப்பை மதிப்பதாகவும், ஆனால் அவர்களுடன் கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று ரஜினி தெரிவித்துள்ளதாகவும், அந்த குரலே தமக்கு போதும் என்றும் கூறினார்.