ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி 50 ஆடுகள் உயிரிழந்த சோகம்
Feb 25 2021 7:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி 50 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் தனக்கு சொந்தமான 200 ஆடுகளை வயல்வெளியில் கூடாரம் அமைத்து இரவு நேரத்தில் அடைத்துள்ளார். அப்போது உராய்வின் காரணமாக உயர் அழுத்த மின் கம்பிகள் கூடாரத்தின் மேல் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக 50 ஆடுகள் பலியாயின. இதற்கு அரசு அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.