திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
Feb 25 2021 7:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் ரயில் நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - தனியார் நிறுவனங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.