புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஊருக்குள் புகுந்த புள்ளிமான்-தெருநாய்கள் கடித்து உயிரிழப்பு
Feb 26 2021 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஊருக்குள் புகுந்த புள்ளிமான் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோயில் தெருவில் சோலையப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு உடல்கூறு ஆய்விற்கு வெங்கலமேடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.