மதுரையை சேர்ந்த இந்தோ - திபெத் பாதுகாப்பு படை வீரர் கன்னிவெடியில் சிக்கி மரணம்
Feb 26 2021 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த இந்தோ - திபெத் பாதுகாப்பு படை வீரர் கன்னிவெடி தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார் - பொய்கை கரைப்பட்டியை சேர்ந்த பால்சாமி என்ற இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர், கடந்த 24-ம் தேதி நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட போது, கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் பால்சாமிக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், 2 வயதில் நிதிக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். அவரது உடல், சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.