மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் 50% சுங்க கட்டண வசூல் - உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
Mar 1 2021 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளிலும், 50 சதவீத கட்டணமே வசூலிக்க கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது, 50 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவால், நாள்தோறும் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இந்த சாலையில் பயணத்துள்ளாரா? என கேள்வி எழுப்பினர். டெல்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளரை இந்த சாலையில் வேலூர் பொற்கோவிலுக்கு பயணித்து அறிக்கை தாக்கல் செய்ய சொல்லுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.