சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் - விசாரணை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Mar 1 2021 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவல்துறை சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. அதற்கென சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. திருமதி. கோமதி தனி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவருக்கு பதில் முத்தரசி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சி.பி.சி.ஐ.டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ஒருவர் புகார் கொடுக்க இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால், சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளார்.