கோவை துணிக்கடையில் திருடிய 3 பேரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது
Mar 1 2021 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை துணிக்கடை ஒன்றில் திருடிய மூன்று பேரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள துணிக்கடையில் விலை உயர்ந்த சேலைகளை மர்மகும்பல் திருடிச் சென்றது. இதுகுறித்து கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்த முருகன், மாணிக்கவாசகம், தனலட்சுமி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை, சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள துணிகடைகளில் சேலைகளை திருடி கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.