ஒற்றை இலக்கில் தொகுதிகளை பெற்றுக்கொள்ள நிர்ப்பந்தம் செய்யும் தி.மு.க. - கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தி
Mar 6 2021 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒற்றை இலக்குகளில் தொகுதிகளை பெற்றுக்கொள்ளும்படி தி.மு.க. வற்புறுத்தி வருவதால், அக்கட்சிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்லையொட்டி, முக்கிய கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் கறாராக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த தேர்தல்களில் இரட்டை இலக்கில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் ஒதுக்கப்படும் என கூறி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. எனவே, நீண்ட இழுபறிக்கு பிறகு ஓரிரு கட்சிகளுடன் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டன. தி.மு.க.வின் இந்தப் போக்கு கூட்டணிக் கட்சிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.