நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 2 பேர் பலி
Mar 6 2021 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள தெம்பளம் எனும் இடத்தில் இருசக்கர வாகனம் மீது வேன் அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கஜேந்திரன் என்பவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.