அ.ம.மு.க.வினர் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்- 4 நாட்களாக ஆயிரக்கணக்கான கழகத்தினர் ஆர்வத்துடன் விருப்ப மனு செய்து வருகின்றனர்
Mar 7 2021 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனுக்கள், கடந்த 3ம் தேதிமுதல் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க நாளன்றே ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் மனுக்களைப் பெற்றுச் சென்றனர். இதைத்தொடர்ந்து, 4-வது நாளான நேற்றும் மகளிர் உட்பட ஏராளமானோர், ஆர்வத்துடன் விருப்ப மனுக்களைப் பெற்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் செய்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் பெற்று விண்ணப்பிப்பதற்காக காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், விண்ணப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.