நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 452 பேருக்கு கொரோனா உறுதி
Apr 21 2021 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேர், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேர், காவல்கிணறு பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 99 பேர் என மொத்தம் 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 333 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 381 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 225 பேர், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்