அருப்புக்கோட்டை அருகே பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு
Apr 21 2021 7:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராம மக்களிடையே பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வேளாண் கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். சீனிவாசன் தலைமை தாங்கி மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மரம் நடு விழாவைத் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் சுமார் 50 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.