நெல்லையில் இடி-மின்னலுடன் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
Apr 21 2021 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் இன்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வந்தநிலையில், திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.