முழு ஊரடங்கை மீறி பொதுவெளியில் நடமாடினால் நடவடிக்கை - காவல்துறை டிஜிபி திரிபாதி எச்சரிக்கை
May 14 2021 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முழு ஊரடங்கை மீறி பொதுவெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டிஜிபி திரு. திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இந்த முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் வெளியில் நடமாடுவதாகவும், அதிக அளவு வாகனங்கள் வெளியில் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் பொதுவெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை டிஜிபி திரு.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வழிகாட்டுதலை ஒரு சிலர் சரியாக பின்பற்றாததால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாக குறிப்பிட்ட அவர், காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல் மக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.