கொரோனா பரவல் தடுப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் - ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை
May 14 2021 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டுமென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2 மணி நேர நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஆக்சிஜன் இருப்பு மற்றும் ஊரடங்கை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் குறித்து பேசப்பட்டது.