ஆத்தூர் தலைவாசல் அருகே கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது - 2,250 மது பாட்டில்கள் பறிமுதல்
May 14 2021 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆத்தூர் தலைவாசல் அருகே, சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் ஒரு வீட்டை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிவலிங்கம் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2 ஆயிரத்து 250 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் கெங்கவல்லி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த பிரபு என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.