கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டயர் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ விபத்து - நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
Jun 18 2021 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
கும்மிடிப்பூண்டியை அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான எஸ்த்தல் என்ற ரப்பர் தூள் உற்பத்தி தொழிற்சாலையில் அதிகாலையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு 3 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்தது.