நீலகிரியில் சோதனைச் சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் இல்லாததால் தொற்று பரவும் அபாயம்

Jul 31 2021 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக-கேரள எல்லையான நீலகிரியில், சோதனைச் சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் இல்லாததால், தொற்று பரவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு ரயில்களிலும், மற்ற வாகனங்களிலும் வந்து செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாததால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில், ஜெயா டிவி செய்தி எதிரொலியாக, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை நேற்று தொடங்கியது. அங்குள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள், தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே, கேரள எல்லை மாவட்டமான நீலகிரியில் உள்ள சோதனைச் சாவடிகளில், தொற்று உள்ளதா என ஆய்வு செய்யவும், பரிசோதனை செய்யவும் சுகாதாரத் துறையினர் சோதனைச் சாவடிகளில் இல்லாததால், நீலகிரி மாவட்டத்திற்கு தொற்று அதிகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00