மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
Jul 31 2021 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில், மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையில், சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.