உசிலம்பட்டியில் இறைச்சி விலை அதிகரிப்பால் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
Jul 31 2021 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், இறைச்சி விலை உயர்வால், நடு ஆடியான இன்று இறைச்சிக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தென் மாவட்டங்களில், ஆடி மாதத்தில் முதல் ஆடி, நடு ஆடி, கடைசி ஆடி என 3 ஆடி திருநாள்களிலும், வீட்டில் அசைவ விருந்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், இறைச்சி விலை அதிகரிப்பால் உசிலம்பட்டி பகுதியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஆட்டு இறைச்சி 900 ஆயிரம் ரூபாயாகவும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி, 300 ரூபாய் என விலை அதிகரித்துள்ளது.