மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
Jul 31 2021 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவிடம் ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆதாரத்துடன் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். TET தேர்வை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேர்முகமாகவோ நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.